Thursday, June 27, 2013

சீத்தாப்பழம்




சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.
                          
சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.

மருத்துவ பயன்கள்:

1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.

2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.

3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.

4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.

6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.

7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.

8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.

9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.

10. சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.

11. இதில் 16.5% சர்க்கரை உள்ளது. கொழுத்த சதை உடையவர்கள் இப்பழத்தை சாப்பிட கூடாது.

Sunday, June 9, 2013

குழந்தைகளுக்கான Good Touch, Bad Touch தெரியுமா? ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டியது!

குழந்தைகளுக்கு குட் டச், பாட் டச் (Good Touch, Bad Touch) பற்றி முக்கிய விடயங்கள். பாலியல் சார்ந்த பிரச்சனைகள் ஐந்தில் ஒரு குழந்தைக்கு நடக்கிறது.
1. குழந்தைகளிடம் அண்டர் வேர் ரூல் பற்றி தெளிவாக விளக்க வேண்டும்.. லிங்க் கொடுத்து இருக்கிறேன்.. குழந்தைகளிடமும் சொல்லி கொடுங்கள்.. அவர்களின் பள்ளிக்கும் சொல்லுங்கள்.

2. உடல் என்பது தனிப்பட்டவரின் உடமை.. அதில் அத்து மீற யாருக்கும் உரிமை இல்லை. தாய், தந்தை கூட சில வயது வரைதான்.

3. எந்த உறுப்பையும் அதன் பெயர் சொல்லி விளக்க வேண்டும்.

4. உள்ளாடை அணியும் பகுதிகள் யாராலும் தொடப்பட்ட கூடாது.அங்கு யாரவது கை வைத்தால் உடனே "No" சொல்ல கற்று கொடுக்கவேண்டும். உடனே உதவிக்கு யாரையாவது கூப்பிட வேண்டும்.

5. நம்பிக்கையான நபர்கள் என்று தாய் அல்லது தந்தை இல்லை குடும்பத்தில் நெருக்கமானவர்களை கூறி அவர்களிடம் உடனே விஷயத்தை கூற சொல்லி கொடுக்க வேண்டும்.

6. நம்பிக்கையான நபர் குடும்பத்தின் வெளியிலும் ஒருவர் இருக்க வேண்டும்.சில விடயங்களை குழந்தைகள் குடும்பத்தில் சொல்ல தயக்கப்படும் அல்லது வெளியில் நடக்கும் விடயங்களை அவரிடம் சொல்லலாம். அவர் பள்ளி ஆசிரியை அல்லது நெருக்கமான நண்பர் என்று இருக்கலாம்.

7. குழந்தைகளின் மேல் பாயும் காமுகர்கள் (pedophile ) குழந்தைகளுக்கு நெருக்கமான சூழலில் இருந்தே கண்டுபிடிக்கமுடியாதபடி செயல்படுவார்கள்.பெரும்பாலும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், வேலை செய்பவர்கள்....எனவே குழந்தைக்கு விழிப்புணர்வு மிக முக்கியம்.

8. முதலில் குழந்தைக்கு பரிசுகள் வாங்கி தன் வசப்படுத்த முயற்சிப்பார்கள். எனவே குழந்தைக்கு பரிசு வாங்கி கொடுபவர்கள் எல்லாம் மிக அன்புடையவர்கள் என்று நாம் போதிக்க கூடாது. அது ஆழமாக தவறான புரிதலாக மாறும்.

9. குழந்தையை யாருக்கும் முத்தம் கொடுக்க சொல்லியோ, கட்டி பிடிக்க சொல்லியோ வற்புறுத்த கூடாது. அது சரி என்று வாதம் செய்ய கூடாது. மாமா எத்தனை ஆசையா இருக்கார்.. போய் முத்தம் கொடு என்று கூறக்கூடாது.

10. அவர்களுக்கு ரகசியத்தை எப்படி வெளிபடுத்த வேண்டும். யாரிடம் சொல்லவேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும்.

11. டிரைவர் போன்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது மடியில் குழந்தைகளை வைத்து கொண்டு வண்டி ஓட்ட அனுமதிக்க கூடாது.

12. யார் எது கொடுத்தாலும் வீட்டில் வந்து கூறும் இனிமையான சூழல் வீட்டில் இருக்கவேண்டும். பயம் இருக்க கூடாது. நேருக்கு நேர் பேச மனதை திறந்து பேசும் சூழல் வேண்டும்.

13. தனது உடலில் அத்துமீற யாருக்கும் உரிமை இல்லை என்று தெரியவும், அப்படி யாரவது செய்தால் எதிர்ப்பை வெளிப்படுத்தி அந்த இடத்தை விட்டு விலகவும் தெரிந்திருக்க வேண்டும்.

14. அவர்கள் குழந்தைகளை மிரட்டுவார்கள்..அம்மா, அப்பாவை கொன்றுவிடுவேன்.. உன் தவறுகளை சொல்லிவிடுவேன் என்று...யார் மிரட்டினாலும் உண்மைகளை கூற இன்னொரு நம்பிக்கையான நபர் ஒருவர் குடும்பத்தை தவிர தேவை.

15. குழந்தைகள் இதை போன்ற விடயங்களை கூறினால் உடனே கோபப்படுவதோ இல்லை அழுவதோ கூடாது. அம்மாவை வருத்தப்படுவார்கள் என்று விடயங்களை மறைக்க முயற்சி செய்யலாம்.

16. ஒவ்வொரு வயது குழந்தைக்கும் அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு சொல்லி கொடுக்கவேண்டும்.அதே சமயம் மிக சிறிய குழந்தைகளுக்கு அடிக்கடி சொல்லி கொடுக்க வேண்டும். இல்லாவிடில் மறந்து விடுவார்கள்.

17. இந்த வீடியோ உங்கள் பள்ளியுள்ளும், வீட்டிலும் போட்டு காட்டலாம். ஷேர் செய்யலாம்.
 




19. குழந்தைகளை காப்பாற்றும் பொறுப்பு நம்மை சேர்ந்தது என்று ஒவ்வொரு பெற்றோரும், மற்றோரும் உணர வேண்டும். அந்த பொறுப்புடன் நடந்து கற்பிக்க வேண்டும்.