பொழுதே புலர்ந்துவிடாதே! நான் தூங்கவேண்டும்...
இதய வீணையின் நரம்புகள் அறுபட்டுச் சுருதிகள் ஓய்ந்தபோது, இடைவிடாமல் ஒலித்த மௌன அழுகைகளின் ஊமை ராகங்களைக் கேட்டுக் கேட்டு என் செவிப்பறைகள் களைத்திருகின்றன. பொழுதே புலர்ந்து விடாதே, நான் தூஙக வேண்டும்! [.....]
ஓ…! அந்த ரோஜாக்காடுகளின் குளுமையிலே…
வசந்த காவியம் படைக்கும் வாள்விழிகளின் இமையோரச் சுகந்தங்களிலே… மோனக் கனவுகளை மூட்டிவிடுகின்ற செம்பிஞ்சு இதழோரச் சிந்துகளின் மௌன ராகத்திலே… ஓ…! அந்த ரோஜாக்காடுகளின் குளுமையிலே… இன்ப மயமான எத்தனை நாட்கள்! [.....]
கரைசேராமல் கண்விழிக்கப்பட்ட கனவுகள்
மலையடிவாரத்து மாந்தோப்பு நிழலில் வசந்தத்தின் கனவுகளை அனுபவிக்க வந்த ஓர் ஒற்றைக் குயில்- நிறைவேறாமல் முற்றுப்பெற்றுவிட்ட நினைவுகளோடும் கரைசேராமல் கண்விழிக்கப்பட்ட கனவுகளோடும் வசந்தகால வருகைக்கு முன்பாகவே நிரந்தரமாக அந்த மாந்தோப்பைப் பிரியப்போகிறது. [.....]
அந்த மயானங்களில்… ஒரு தாலாட்டுக்காக…
என்னிடம் விவாதிக்க மறுத்து என் இதயம் ஊமையாகிவிடும்போது- நான் அதிகமாய்ப் புலம்புகிறேன். என்னுள் விவாதங்கள் நடந்து, முடிவுகள் எடுக்கப்படும்போது- நான் ஊமையாகிவிடுகிறேன். [.....]
இங்கே சில முடிவுகள் மறுபரிசீலனைக்கு...
வரம்புகள் மீறப்பட்டுள்ளன; விதிவிலக்குகளே விதிகளாக்கப்பட்டுள்ளன; பாலைகளிலும், பாறைகளிலும் நாற்றுகள் நடப்பட்டு, நீர் பாய்ச்சப்பட்டதால் நாற்றுக்கும் நட்டம்; நீருக்கும் நட்டம். எதிர்பார்ப்புகள் எல்லாம் ஏமாற்றத்தில் முடிந்துவிட்டதால் கனவுகளும் கற்பனைகளும் தண்டிக்கப்பட வேண்டும்” [.....]
No comments:
Post a Comment